News January 1, 2025
கோவை சரக டிஐஜியாக சசிமோகன் பொறுப்பேற்பு

கோவை சரக டிஐஜியாக பணியில் இருந்து வந்த சரவணசுந்தர், கோவை மாநகர காவல் ஆணையராக, இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக STF காவல் கண்காணிப்பாளராக இருந்த, சசிமோகன் IPS, பதவி உயர்வு பெற்று, கோவை சரக டிஐஜியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று கோவை சரக டிஐஜியாக சசிமோகன் ஐபிஎஸ், அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக காவலர்கள் தங்களது, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
கோவை: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 18, 2025
கோவை: தற்போது வரை 57 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துகளில், 62 இளைஞர்கள் பலியாகினர். இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 207 விபத்துக்கள் நடந்து, அதில் 57 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 11 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
News September 18, 2025
இஸ்ரோ தலைவர் கோவையில் பேட்டி

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதை தெரிவித்தார். டிசம்பரில் ஆளில்லா ராக்கெட் வயோமித்ராவுடன் ஏவப்படும் என்றும், 2027 மார்சில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார். மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை சேகரிக்க, AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.