News March 21, 2024
கோவை ஈஷாவில் மாயமான 6 பேர்?

கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் கணேசன் காணாமல் போயுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News November 27, 2025
கோவையில் தூக்கிட்டு தற்கொலை

கோவை சுந்தராபுரம் சேர்ந்தவர் தினேஷ் கார்த்திக் (18). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரட்டி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
தொண்டாமுத்தூர்: RIP ‘ரோலக்ஸ்’

தொண்டாமுத்தூர் பகுதியில் அக்.17-ம் தேதி யானை பிடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவ.12-ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. “ரோலக்ஸ்” காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்த ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்தது. இதில் யானை இறந்து இருப்பது தெரியவந்தது.
News November 26, 2025
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.


