News May 7, 2025
கோவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை, கரும்புக்கடை சேர்ந்தவர் சுமையா பானு (22). இவருக்கு திருமணம் முடிந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மாமனார் வீட்டில், அதிக வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சுமையா பானு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை விரக்தி அடைந்த சுமையா பானு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

கோவை வால்பாறையை சேர்ந்த இளைஞர் கார்த்திக், ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள சகோதரி ஐஸ்வர்யா வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால், உரிய வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
கோவை செம்மொழி பூங்கா: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கோவை செம்மொழி பூங்கா நாளை (டிச.11) திறக்கப்படவுள்ள நிலையில் நுழைவு கட்டண விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ஒருவருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10வயது) ரூ.5 நடைபாதை உபயோகிப்போருக்கு ஒருவருக்கு(மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு ரூ.25,000 குறும்பட ஒளிப்பதிவு, இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
News December 10, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


