News March 14, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (14.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச்.15) “Rocks on Harris” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில், 36 பாடல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
News March 15, 2025
குழந்தைகள் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

கோவை மாவட்டத்தில் மார்ச்.17 முதல் 22 வரை குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த திரவம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 மாத முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சி அரசு மருத்துவமனைகள் தற்காலிக முகாம்களில் நடைபெறும். குழந்தை வைத்திருப்பவர்களுக்கு ”SHARE” பண்ணுங்க
News March 15, 2025
ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

காரமடையை அடுத்துள்ள பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் லோகேஷ்(16). இவர் தனது உறவினர்களுடன் நேற்றிரவு காரமடை கோவில் தேர்த்திருவிழாவிற்கு வந்துள்ளார். பின், மீண்டும் உறவினர்களுடன் இன்று அதிகாலை ஆட்டோவில் வீடு திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் மூவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.