News April 24, 2025
கோவை: இந்திய ராணுவத்தில் சேர நாளை கடைசி!

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு நாளை(ஏப்.25) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது. மோசடி ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT!
Similar News
News November 23, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 23, 2025
காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.


