News January 23, 2025

கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

image

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

Similar News

News December 13, 2025

கோவை: டிகிரி போதும் அரசு வங்கியில் வேலை!

image

அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான நைனிடால் பேங்க் லிமிடெடில் காலியாக உள்ள Customer Service Associate (CSA /Clerk) (II) உள்ளிட்ட 185 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.01ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 13, 2025

மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

image

மேட்டுப்பாளையம், சிறுமுகை லிங்காபுரத்தில், நேற்று காலை ஒற்றை காட்டு யானை தாக்கியதில், மாரிச்சாமி@ராஜன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News December 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!