News January 23, 2025
கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
Similar News
News October 25, 2025
கோவை: INSTA-வில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர்

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடன் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். 2 பேர், இன்ஸ்டாவில் நட்பாக பேசி வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணின் படத்தை AI மூலம் ஆபாசமாக எடிட் செய்து போலியான ஐ.டி மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 25, 2025
கோவையில் 2 நாள்கள்! வெளியான முக்கிய அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் (25.10.2025) மற்றும் (26.10.2025) ஆகிய 2 நாட்களிலும் வழக்கம் போல் காலை 9 முதல் மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) செயல்படும். எனவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முகாம் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
News October 24, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


