News January 23, 2025

கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

image

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

Similar News

News November 23, 2025

காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

image

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 23, 2025

காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

image

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

News November 23, 2025

கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

image

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

error: Content is protected !!