News April 11, 2025
கோவை அருகே விபத்து: 2 பேர் பலி

சிறுமுகையை அடுத்த ஆலங்கொம்பு பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அதேவேளையில் ஒரே டூவீலரில் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர். அசுர வேகத்தில் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழக வேளாண் துறை அமைச்சர் தலைமையில் 87 வது விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கோவையை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செல்ல உள்ளதால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பவன் குமார் அறிவித்துள்ளார்.
News November 28, 2025
கோவையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!

கோவையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று பிறந்த பச்சிளம் குழந்தை, உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், சாலையில் இறந்து கிடந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மக்களே உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்க!
News November 28, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவையில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 4, 2025 கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வலியுறுத்தியுள்ளார். எனவே இறுதி நாள் வரை காத்திருக்காமல் விரைவில் படிவங்களை திரும்ப அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க!


