News August 26, 2024
கோவை அருகே விபத்து: ஒருவர் பலி

கோவை அடுத்த சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் தனது இருசக்கர வாகனத்தில் விளாங்குறிச்சி- சரவணம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் படுகாயமடைந்து இன்று உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் லாரி ஓட்டுநர் பால்துரை மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
குறைந்த விலையில் பாக்கு நாற்றுகள் வேண்டுமா?

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் 60,000 மொஹித் நகர், 20,000 மங்களா இன பாக்கு நாற்றுகள் தயாராக உள்ளன. நான்கு ஆண்டுகளில் பலன் தரும் இந்நாற்றுகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் 8526371711, 8778722484, 9629456181.
News September 15, 2025
கோவை 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம்▶️ அல்லது கோவை பீளமேடு நிவாசன் உதயனா பில்டிங்கில், நாளை (செ.16)இதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இதனை ஷேர் பண்ணுங்க!
News September 15, 2025
கோவை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!