News March 16, 2025

கோவையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு!

image

கோவையில் சாலை விதி மீறல்கள், விபத்துகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில், இரவு நேரங்களில், ஒன்வே மற்றும், அதிவேகமாக வாகனங்களில் வருபவர்கள், கண்காணிக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும். மேலும் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News March 17, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

கருவலூர் மாரியம்மன் கோயில்!

image

கோவை அன்னூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.

News March 16, 2025

உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன்  கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.

error: Content is protected !!