News March 16, 2025
கோவையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு!

கோவையில் சாலை விதி மீறல்கள், விபத்துகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில், இரவு நேரங்களில், ஒன்வே மற்றும், அதிவேகமாக வாகனங்களில் வருபவர்கள், கண்காணிக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும். மேலும் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Similar News
News March 17, 2025
BREAKING: வானதி சீனிவாசன் கைது

பாஜக சார்பில் இன்று(மார்ச்.17) டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி, கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை, ஆர்ப்பாட்டம் செல்லும் வழியிலே போலீசார் கைது செய்தனர்.
News March 17, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

கோவையில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
News March 17, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.