News August 25, 2024
கோவையில் வாடகை தாயாக 10 பேர் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் ஊர்க் நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
கோவையில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் விபரீத முடிவு!

கோவை செல்வபுரம் என்.எஸ்.கே வீதியை சேர்ந்தவர் தனுஷ். நகை பட்டறை தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுடைய தனுஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனமுடைந்த தனுஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 6, 2026
கோவை: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

கோவை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
கோயம்புத்தூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கோவை மாநகராட்சி சார்பில் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், நாற்காலிகள் போன்ற பெரிய வீட்டு கழிவுப் பொருட்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் ஜனவரி 10, 11, 12, 13 தேதிகளில் நடத்தப்படுகிறது. எனவே மக்கள் குறிப்பிட்ட சேகரிப்பு மையங்களில் பொருட்களை ஒப்படைக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ccmc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என அறிவித்துள்ளது.


