News March 28, 2024
கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவுற்று பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை, நீலகிரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
கோவை அருகே விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்!

கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் கன்றுகுட்டி ஒன்று தவறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்தது. இதனை காப்பாற்றுவதற்காக விவசாயி நடராஜன் கிணற்றில் குதித்துள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக அவர் பலியானார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 22, 2025
JUST IN: பொள்ளாச்சி அருகே சிறுமி உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் இந்திரா நகர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளி தம்பதியரின் 3வயது மகள் ராகினி, மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்த வந்த கோட்டூர் காவல்துறை சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
News October 22, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை!

கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, குளங்கள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சித்திரைச்சாவடி தடுப்பணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் ஆறு, குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.