News March 28, 2024
கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவுற்று பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை, நீலகிரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
இணைய நிதி மோசடிகள் குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு

கோவை காவல்துறை, இணைய வழி நிதி மோசடிகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதில் மக்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தெரியாத மின்னஞ்சல்களைத் திறக்காமலும், பாதுகாப்பான இணைய தளங்களில் மட்டுமே பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.
News November 15, 2025
கோவை: RIP சிந்து!

கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மோப்ப நாய் பிரிவில், சிந்து(13) என்ற பெண் லேப்ரடார் இன மோப்பநாய் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. 8 ஆண்டுகள் வெடிகுண்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாய் சிந்து உயிரிழந்ததை அடுத்து, சிட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காவல் துறை மரியாதையுடன் சிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
News November 15, 2025
கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


