News August 3, 2024
கோவையில் திறந்து வைக்கிறார் முதல்வர்

கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
Similar News
News January 1, 2026
கிணத்துக்கடவு: கணவனை கொன்ற மனைவி

கிணத்துக்கடவை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தீஷ். மனைவி இந்திராணி. இந்நிலையில் இந்திராணிக்கு சித்தப்பா வினோத் உடன் தகாதஉறவு இருந்துள்ளது. கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இந்திராணி வினோத் மற்றும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கொலை செய்து சேலம் ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இதனிடையே நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இந்திராணி கணவரை கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார்.
News January 1, 2026
கோவை: வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வேண்டுமா?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். (SHARE)
News January 1, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க


