News August 3, 2024
கோவையில் திறந்து வைக்கிறார் முதல்வர்

கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
Similar News
News October 31, 2025
கோவையில் நவம்பர் 1, 2 தேதிகளில் “நம்ம ஊரு திருவிழா”

கோவையில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் வ.உசி மைதானத்தில் நவம்பர் 1, 2 தேதிகளில் கோயம்புத்தூர் சங்கமம்–நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. 400 கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்குவார். நாட்டுப்புற, இசை, நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் மக்களை திரளாக கலந்து கொண்டு பாரம்பரியக் கலைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
News October 31, 2025
கோவையில் டெண்டர் கோரிய தமிழக அரசு!

நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை தொகுதியில் புதிதாக பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதற்கேற்ப கோவையில் திமுக வெற்றி பெற்ற நிலையில்,இதனை தொடர்ந்து ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில் 20.7 ஏக்கர் நிலம் மைதானம் அமைக்க தேர்வானது. இந்தநிலையில் மைதானத்திற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
News October 31, 2025
புலியகுளத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி சனிக்கிழமை நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கோவை, புலியகுளம் விக்னேஷ் மஹால் கல்யாண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது, இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று இலவச வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர்,மேலும் இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம்.மேலும் தகவலுக்கு 8072709654 அழைக்கவும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


