News October 8, 2024
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை

கோவையில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கியது. அரசு மருத்துவமனையின் உள்ளே சாக்கடைநீர் கலந்த மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால், ரயிலை பிடிக்கச் சென்ற பயணிகள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.
Similar News
News December 10, 2025
கோவையில் சோகம்: ஒரு மாத பெண் குழந்தை பலி!

பல்லடம் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மனைவி பூஜா. தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஸ்ரீனி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி குழந்தைக்கு கடுமையான தலை மற்றும் கால் வலி இருந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
கோவை கலெக்டர் பெயரில் போலி FACE BOOK

சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் முக்கிய நபர்களின் புகைப்படங்கள் பெயர் வைத்து போலி கணக்குகள் துவங்கி பணம் பெற்று மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கலெக்டர் பவன்குமார் பெயரில் புகைப்படத்துடன் முகநூலில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இக்கணக்கிலிருந்து அவரது நண்பர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.


