News August 3, 2024
கோவையில் கொடூர கொலை: அண்ணாமலை கண்டனம்

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயக்குமார் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக, அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். “தேசிய கட்சியின் மாநில தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை யார் உயிருக்கும் உத்தரவாதமில்லை. அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆனால், காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 30, 2025
BREAKING: கோவையில் அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்

கோவை, சங்கனூரில் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இத்தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 30, 2025
கருமத்தம்பட்டி அருகே லிப்ட் கொடுத்து நகை திருட்டு

கணியூரை சேர்ந்த ராணி. இவர் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இவர் பணி முடிந்து கணியூர் வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரிடம் நானும் கணியூர் தான் செல்கிறேன் வாருங்கள் என்று அழைத்து வந்து, அவர் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க நகையை பறித்துள்ளார். தங்க நகை பறித்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News November 30, 2025
கருமத்தம்பட்டி அருகே லிப்ட் கொடுத்து நகை திருட்டு

கணியூரை சேர்ந்த ராணி. இவர் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இவர் பணி முடிந்து கணியூர் வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரிடம் நானும் கணியூர் தான் செல்கிறேன் வாருங்கள் என்று அழைத்து வந்து, அவர் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க நகையை பறித்துள்ளார். தங்க நகை பறித்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


