News August 7, 2024
கோவையில் இன்றே கடைசி நாள்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 21 முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 557 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம். முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.
News November 23, 2025
கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.


