News August 19, 2024

கோவையில் இன்று மின்தடை

image

கோவையில் மின் பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 முதல் மாலை 4 மணிவரை இச்சிபட்டி, கொத்துமுட்டிபாளையம், என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர், கணியூர், பள்ளபாளையம் EB அலுவலகம், தென்னம்பாளையம், அரச்சலூர், சிவன்மலை, நத்தக்கடையூர், செட்டிபாளையம், காங்கேயம் சாலை, வெள்ளமடை, அதிராம்பட்டினம், ஐயர்பாடி, அட்டகட்டி, அருவிகள், சின்ன-பெரிய கல்லாறு, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Similar News

News November 20, 2025

கோவையில் குப்பை அள்ளும் வண்டியில் வந்த உணவு

image

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு, உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை, குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு இது என தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

News November 20, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

image

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!