News April 5, 2025
கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 23, 2026
விருதுநகர்: மழை நேரங்களில் ஒரு மெசேஜ் போதும்!

விருதுநகர் மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
News February 23, 2026
ராஜபாளையம் அருகே தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டில் சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா். இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
News February 22, 2026
ஸ்ரீவி: போக்சோ வழக்கில் இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவி.,அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுப்புராஜூவை கைது செய்தனர்.


