News March 28, 2025

கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

தூத்துக்குடி: டீக்கடையில் நடத்திய சோதனையில் அதிர்ச்சி

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் பாளை ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டீக்கடை நடத்தி வரும் புதுக்குடியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த மாருதி காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 11, 2026

தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க. இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

தூத்துக்குடி: தனியார் பஸ் மோதி முதியவர் பரிதாப பலி

image

விளாத்திகுளம் அருகே குளத்தூர் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (85). இவர் நேற்று முன்தினம் கீழ வைப்பார் வங்கிக்கு செல்வதற்கு குளத்தூர் பேருந்து நிலையம் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்து கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து தூத்துக்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!