News March 28, 2025
கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
JUST IN தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருகை தருகிறார். கோவில்பட்டிக்கு வருகை தரும் முதல்வர் அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம், அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் செய்து வருகிறார்.
News October 25, 2025
28 ல் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 25, 2025
தூத்துக்குடி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!


