News April 10, 2025
கோழி, ஆட்டு பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவித்ததன்படி, தேசிய கால்நடை இயக்க தொழில்முனைவோர் திட்டத்தில் கோழி, ஆட்டு, பன்றி பண்ணைகள் அமைக்க அரசு நிதியுதவி வழங்குகிறது. இறைச்சி, முட்டை உற்பத்தி உயர்ந்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விண்ணப்பிக்க https://nlm.udyamimitra.in-ல் பதிவு செய்யலாம். இது குறித்து கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: இருவேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2முதியவர்கள் உயிரிழந்தனர். கவரைப்பேட்டை அருகே பைக்கில் சென்ற அகமது உசேன் (65) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல், ஆர்.கே.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற ராமலிங்கம் (70) என்பவர் பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
திருவள்ளூர்: காதல் திருமணம்-மாப்பிளையை பொளந்த பெற்றோர்!

அரக்கோணத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மணமகனின் தாயார், மாற்று சமூகப் பெண்ணை மணந்த ஆத்திரத்தில், மனைவியின் கண்முன்னே மகனை சரமாரியாகத் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
News December 1, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (30.11.2025) இரவு இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


