News March 25, 2025

கோர விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை அடுத்த ரெட்டியார்பட்டி அருகே நேற்று மாலை நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

பாளையங்கோட்டையில் விசாரனை கைதி தற்கொலை

image

ஆய்க்குடியை சேர்ந்த திருமலை குமார் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதாகி திருமலை குமார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

News November 19, 2025

நெல்லை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நெல்லை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News November 19, 2025

பாளையங்கோட்டையில் கிரேன் மோதி பெண் உயிரிழப்பு

image

மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி செல்வி வயது 54. இவர் இன்று காலை மகிழ்ச்சி நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். கிரேனை ஓட்டி சென்றவர் ஹெட்போன் மாட்டிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து கிரேன் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!