News June 26, 2024

கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

image

சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 8, 2026

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்களை வரும் ஜனவரி 12-ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.

News January 8, 2026

ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

ராணிப்பேட்டையில் திருக்குறள் வார விழா தேர்வு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் திருக்குறள் வார விழா–2026 முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான வினாடி–வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு நாளை (ஜன.9) மதியம் 2 முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!