News June 26, 2024
கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
ராணிப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ராணிப்பேட்டை, ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று(டிச.9) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை.
News December 9, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வன்னிவேடு மேம்பாலத்தில் இன்று(டிச.8) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இறந்தவர் சரண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 9, 2025
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று(டிச.8) மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு கேட்டறியப்பட்டது. வருவாய், நிலம் மற்றும் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


