News February 17, 2025

கோயில் குளத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

image

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

Similar News

News November 28, 2025

ராணிப்பேட்டை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

டிட்வா புயல்: ராணிப்பேட்டையில் ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) ராணிப்பேட்டைக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

ராணிப்பேட்டை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

ராணிப்பேட்டை மாவட்டம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வருகின்ற (நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா அறிவுறுத்துள்ளார்.

error: Content is protected !!