News August 7, 2024
கோயம்புத்தூரில் மழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்புத்தூரில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூரில் 5செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.
Similar News
News September 15, 2025
ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு 1040 பேர் அப்செண்ட்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. போலீசாரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்எஸ்புரம் மாநகராட்சி மகளிர் பள்ளி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, அவினாசிலிங்கம் கல்லூரி வளாகங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 2349 பேர் தேர்வு எழுதினர். 1040 பேர் தேர்வு எழுத வரவில்லை.
News September 15, 2025
கோவை: தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!

கோவையில் விரைவு தபால் (எக்ஸ்பிரஸ் மெயில்) சேவை துவங்கி இன்று 38 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. கோடிக்கணக்கான கடிதங்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையச் செய்யும் வகையில் மத்திய அரசு 1986 ஆகஸ்ட் 1-ம் தேதி இச்சேவையை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை, கோல்கட்டா உட்பட 14 நகரங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே இருந்த இது, தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.
News September 15, 2025
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <