News August 26, 2024

கோபி: தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

image

கோபி அருகே லக்கம்பட்டி கிராமம் காலேஜ் ரோடு காலனியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்து ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டதினால் நேற்றிரவு இறந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்தினர் அவரது உடலை உறுப்பு தானம் செய்தனர். இதையடுத்து அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் அரசு மரியாதை செலுத்தினர்.

Similar News

News November 19, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

News November 19, 2025

ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

image

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

News November 18, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!