News April 10, 2025
கோட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு எரிந்து சேதம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 18, 2025
திருவாரூர்: தையல் தொழிலாளி தற்கொலை

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி மோகன் (56). இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மோகனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News December 18, 2025
திருவாரூர்: தையல் தொழிலாளி தற்கொலை

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி மோகன் (56). இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மோகனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News December 18, 2025
திருவாரூரில் ரூ.3.21 கோடி மானியம் வழங்கல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் 68 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கினார்.


