News March 24, 2025
கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியர் அறிவுரை

சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள்,முதியோர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News November 21, 2025
சிவகங்கை: டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

முத்தனேந்தல்–கட்டிக்குளம் சாலையில் இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நேரு (67) பலியானார். சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் (54) தலையில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
மறவமங்கலம் அருகே முதியவர் அரிவாளால் வெட்டி கொலை

மறவமங்கலம் அருகே உள்ள கிழவனூர் பகுதியை சேர்ந்த சற்குணம் (எ) சரவணன் (57) அப்பகுதியில் கடை நடத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சந்தக் கடை பகுதியை அடைந்த போது அங்கு வந்த சில நபர்கள் அவரை தடுத்து நிறுத்தி, அரிவாளால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஹரிதாஸ், மாதவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
சிவகங்கை: தேர்வு இல்லை.. ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை.!

சிவகங்கை மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <


