News March 28, 2024

கோடை காலத்தில் கடைபிடிக்க வழிமுறைகள் 

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

சிவகங்கை: டூவீலரால் தம்பியை கொன்ற அண்ணன்

image

திருப்புவனம் அருகே மஞ்சகுடி பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன் 34, தயாளன் 25, இருவரும் அருகருகே வீடுகளில் வசிக்கின்றனர். தர்மேந்திரனின் டூவீலரை தயாளன் கேட்காமல் மதுரைக்கு எடுத்துச் சென்றதால் தம்பி தயாளனை கண்டித்துள்ளார். ஆத்திரத்தில் தயாளன் கடப்பாரையை எடுத்து டூவீலரை சேதப்படுத்தியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தம்பி தயாளனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 13, 2025

சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 13, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

image

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

error: Content is protected !!