News March 25, 2025
கோடநாடு கொலை: ஜெயலலிதா வளர்ப்பு மகனுக்கு சம்மன்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News December 3, 2025
நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 ஊராட்சிகளும் அதில் 8 கிராம ஊராட்சிகள் பிரிக்காமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறு சீரமைப்பு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட சிறப்பு அரசிதழ் 16 தேதி வெளியிடப்பட்டுள்ளது . பொதுமக்கள் இது குறித்த கருத்துக்களை 17 தேதிக்குள் அனுப்பலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
கூடலூர்: பெண்ணை தாக்கி கொன்ற புலி சிக்கியது

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பழங்குடியினரான நாகியம்மாள் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. தொடர்ந்து வனத்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடத்தில் கேமராக்கள் வைத்து கண்காணித்த நிலையில் இன்று டிT37 என்ற பெயரிட்ட புலி கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
News December 3, 2025
நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


