News January 24, 2025

கொள்ளையன் வீட்டில் பிடிபட்ட நகைகள்

image

கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Similar News

News November 28, 2025

மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வின் தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News November 28, 2025

JUST IN நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை

image

நெல்லை, பாப்பாக்குடி அருகே கலிதீர்த்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் (29) தனது வயலில் உள்ள பம்பு செட் அறையில் தூங்கியபோது, மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தனர். அதிகாலையில் தாயார் சென்று பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்தது. பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 28, 2025

நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?…

image

நெல்லை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!