News August 17, 2024

கொள்ளிடம் ஆற்றில் முதலை

image

திருச்சி கொள்ளிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர் முதலை ஆற்றில் செல்வதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று முதலையை தேடிய போது காணவில்லை. இதனால் யாரும் ஆற்றுக்குள் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யவும்.

Similar News

News November 2, 2025

திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்தம் – உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை 04332-260576, ஶ்ரீரங்கம் 0431-2230871, மேற்கு 0431-2410410, கிழக்கு 0431-2711602, திருவெறும்பூர் 0431-2415731, லால்குடி 0431-2541500, மண்ணச்சநல்லூர் 0431-2561791, முசிறி 0432-6260335, துறையூர் 0432-7222392 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

திருச்சி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News November 2, 2025

திருச்சி: கைதியின் சடலம் மறு உடற்கூறாய்வு

image

திருச்சி மத்திய சிறையில் கடந்த அக்.24-ம் தேதி உயிரிழந்த சுபின் குமார் என்பவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக, அவரது தாயார் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் சுபின் குமார் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் சுபின்குமார் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!