News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Similar News
News October 14, 2025
மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகரி விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News October 14, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 13, 2025
2115 இடங்களில் சாதி அடையாளம் அழிப்பு – எஸ்பி தகவல்

எஸ்பி சிலம்பரசன் இன்று பத்ரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு நெல்லையில் கொலை குற்றம் 20% குறைந்துள்ளது. சாதி பிரச்னையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தாண்டு 21 போக்சோ வழக்கு பதியப்பட்டதில் 22 பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். இதுவரை 2115 இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.