News March 18, 2024
கொலை வழக்கில் நான்கு பேர் கைது

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 11, 2025
ரேஷன் கார்டில் பிரச்சனையா..இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க

தேனி மாவட்டத்தில் ஜூலை.12 ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
News July 11, 2025
தேனியில் வரதட்சனை கொடுமை பெண் உயிரிழப்பு

தேனி , அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகள் முத்துமணி. இவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு தொல்லை செய்ததால், அவரது தந்தை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துமணி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பு சம்மந்தமாக தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை.
News July 11, 2025
தேனி ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.