News March 18, 2024
கொலை வழக்கில் நான்கு பேர் கைது

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 27, 2025
தேனி: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு.!

கூடலூரை சேர்ந்தவர் அபிசதா. இவருக்கு 2.1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் 42 நாட்களுக்கு முன்பு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) 2வது குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு தாய் வேலை செய்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த முதல் குழந்தை 2வது குழந்தையின் மீது தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
தேனி: இளைஞர் திடீரென தற்கொலை

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (30). இவரது தாயார் வீரம்மாள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ரவீந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


