News March 28, 2025

கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

image

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

Similar News

News November 27, 2025

திருவாரூர்: வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

image

முத்துப்பேட்டையை சேர்ந்த 18 வயது நிரம்பிய வாய் பேச முடியாத மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 23ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா மர்ம நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.

News November 27, 2025

திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர்!

image

திருத்துறைப்பூண்டி, குன்னூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் செல்லதுரை என்பவர் வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் உள்ளே இருந்த பார்வையற்ற ஒரு நபர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .

News November 27, 2025

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!