News January 1, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

image

நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (25). இவர் நாங்குநேரி பகுதியில் அடிதடி கொலை முயற்சி செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது கேட்டுக் கொண்டதற்கு இணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து கலெக்டர் உத்தரவின்படி இசக்கி பாண்டி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News November 23, 2025

நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு..!

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 23, 2025

கனமழை மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது சில இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (நவ 23) விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் உள்ள மின் மின் வார்த்தைகள் மற்றும் மின் இணைப்பு பற்றி அருகே குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மின்சார குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News November 23, 2025

நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!