News September 27, 2024
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
Similar News
News November 22, 2025
தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<
News November 22, 2025
தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 22, 2025
தேனி: தூங்கிய பெண்ணிடம் செல்போன் பறிப்பு!

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (54). கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் வாயை பொத்தி, அவரிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


