News September 27, 2024
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
Similar News
News December 3, 2025
தாமதமின்றி SIR படிவங்களை சமர்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளைக்குள் SIR படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் டிச.11 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி நாள் வரை காத்திருக்காமல் படிவங்களை பூர்த்தி செய்து BLOகளிடம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
தேனி: முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு; மூவர் கைது!

தேவதானப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (டிச.2) அன்பழகனின் மகன் சத்தியநாதன் அன்பழகனின் பேரன் ஆகியோர் பாண்டியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவதானப்பட்டி போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
News December 3, 2025
தேனி: சண்டையை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.


