News April 29, 2025
கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.!

தேவகோட்டை அருகே உள்ள விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சருகனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


