News May 16, 2024
கொட்டும் மழையில் வாகனங்கள் திடீர் சோதனை

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் கனிமவளங்கள் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இவை அவ்வப்போது தமிழக மற்றும் கேரள போலீசாரால் சோதனை செய்யப்படுகின்றன. நேற்றும், இன்றும் இரவு புளியரை, ஆரியங்காவு பகுதிகளில் போலீசார் கனிம வள லாரிகளை கொட்டும் மழையில் சோதனை செய்தனர். அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்று டிச.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்படி வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், 10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.


