News October 23, 2024
கொட்டாரத்தில் கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமை குற்றச்சாட்டில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி இன்று (அக்டோபர் 23) விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

நாகர்கோவில் சகாய நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56) இவர் கடைக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி தனசேகரன், செல்வராஜுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
News December 9, 2025
குமரி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
குமரி: ரூ.100 கோடி சுருட்டல்? போஸ்டர்களால் பரபரப்பு

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டு அவர் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய வகையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் 100 கோடி ரூபாய் சுருட்டியதாக சமூக நீதி மாணவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.


