News April 6, 2025

கொடை: சுற்றுலா பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம் 

image

கொடைக்கானல் – வத்தலகுண்டு கெங்குவார்பட்டி அருகே கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட் பஸ் நேற்று(ஏப்.5) சனிக்கிழமை அதிகாலை, 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொடைக்கானல் மற்றும் பெருமாள் மலையைச் சேர்ந்த ஆறுமுகம், (43), எட்வின்(42) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Similar News

News December 12, 2025

பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

image

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.

News December 12, 2025

பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

image

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.

News December 12, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய அட்டை கோரிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.

error: Content is protected !!