News March 24, 2024

கொடைக்கானல் மலையில் கடும் புகை மூட்டம்

image

பழனி சவாரிக்கு மலைப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர், கிராம மக்கள் போராடிய தீயை அனைத்து நிலையில் இன்று புகை மூட்டமாக காணப்பட்டது. மலையிலிருந்து வெளியேறிய புகை வின்னி முட்டும் அளவிற்கு சென்றது. காட்டு தீயால் ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமாகின. வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2025

காதலியை ஏமாற்றிய இளைஞர் கைது!

image

பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது  23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானர். இந்தநிலையில் விவேக்  அப்பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விவேக்கை திருப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

News April 20, 2025

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 20, 2025

திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!