News April 10, 2024
கொடுங்கோல் ஆட்சியை நோக்கி நகர்கிறோம்

கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்தியா நகர்வதாக வயநாடு தொகுதி சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதை ஏற்க மறுக்கிறது. இல்லை என்றால் ராகுல் இங்கு போட்டியிட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார். மேலும், தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளதால், அதனை அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என்றார். ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
Similar News
News April 29, 2025
வைபவ் சூர்யவன்ஷிக்கு பம்பர் பரிசு.. பிஹார் CM அறிவிப்பு

ஓவர் நைட்டில் பாப்புலராகி இருக்கும் RR வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகளுடன் பணமழையும் கொட்டத் தொடங்கியுள்ளது. IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என சாதனை படைத்த அவரை பிஹார் CM நிதிஷ் குமார் வாழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக வருங்காலத்தில் புதிய சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நிதிஷ், வைபவுக்கு ₹10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
News April 29, 2025
செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்க திமுக திட்டம்!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என SC அறிவித்துவிட்டதால், கட்சிப் பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. திமுகவில் இந்தப் பதவி, தென்மண்டல அமைப்புச் செயலாளராக Ex மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இருந்தபோது கவனம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டேன்.. நடிகர் நானி

ஹிட் 3 படத்திற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நானி, இந்தப் படத்திற்காக நான் தயாரித்த கோர்ட் படம் உள்பட எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன்; இனியும் வேண்டுமென்றால் ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினார். இதைக்கேட்டு இயக்குனர் ராஜமௌலி சிரித்தார்.