News August 26, 2024

கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

image

கோபி அடுத்த கொடிவேரி பகுதியில் தடுப்பணை உள்ளது.
இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஊற்றுகிறது. இந்தத் தண்ணீரில் குளிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

Similar News

News July 11, 2025

ஈரோடு: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

image

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <> இங்கே கிளிக் செய்யவும்<<>>. 9655546769 என்கிற எண்ணை அணுகலாம். (SHARE IT)

News July 11, 2025

ஈரோடு: ரேஷன் கார்டில் மாற்றமா..?

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஜூலை 12ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

சித்தோட்டில் குட்கா விற்றவர் கைது!

image

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கங்காபுரம் பகுதியில், வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 360 கிராம் எடையுள்ள ஹான்ஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.

error: Content is protected !!