News April 14, 2024

கையாடல் செய்த வங்கி மேலாளர் சிறையிலடைப்பு

image

சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில்  அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 2, 2025

சிவகங்கை: ஒரே நாளில் 700 பேர் மீது வழக்கு

image

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் மொத்தம் ஒரே நாளில் 700 பேர் மீது போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இத்தகைய திடீர் வாகன சோதனைகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News December 2, 2025

சிவகங்கை விபத்து: உயிரிழந்தோர் புகைப்படம் வெளியீடு!

image

1.சென்றாயன் (36) – அரசு பஸ் டிரைவர், வத்தலகுண்டு, 2.முத்துமாரி (60) – சிங்கம்புணரி, 3.கல்பனா (36) – காரைக்குடி, 4.மல்லிகா (61) – அரியக்குடி, 5.குணலட்சுமி (55) – தேவகோட்டை, 6.செல்லம் (55) – மேலூர், 7.தெய்வானை (58) அம்மன்குறிச்சி, புதுக்கோட்டை, 8.முத்துலட்சுமி (49) மேலூர், 9.வெற்றிச்செல்வி (60) – திண்டுக்கல், 10.லாவண்யா (50) – திருவல்லிக்கேணி, சென்னை 11. டயானா (17) – கல்லூரி மாணவி, துவரங்குறிச்சி.

News December 1, 2025

சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

image

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!