News April 14, 2024
கையாடல் செய்த வங்கி மேலாளர் சிறையிலடைப்பு

சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 7, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கையில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
காரைக்குடி: இளம் பெண் கொலை – ஒருவர் கைது

காரைக்குடி அருகே ஆவடைபொய்கை என்ற இடத்தில் நேற்று மகேஸ்வரி என்ற பெண் அவரது காரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் சசிகுமார் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாத போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 7, 2025
சிவகங்கை: விவசாயிகள் நில விவர பதிவு நீட்டிப்பு

விவசாயிகளின் நில உடைமை விவர பதிவு செய்யும் காலக்கெடு ஏப்ரல்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை பெறும் போது, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் தங்களது நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.


