News August 7, 2024

கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று
10ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 25, 2025

வேலூர் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி!

image

வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, வினாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

வேலூர்: அறிவியல் கல்வி சுற்றுலா.. வழியனுப்பிய கலெக்டர்!

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அறிவியல் கல்வி சுற்றுலா செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.25) ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வரப்பிள்ளை உட்பட பலர் உடனிருந்தனர்.

News November 25, 2025

வேலூர்: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

image

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!