News August 7, 2024

கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று
10ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 27, 2025

வேலூரில் அவலம் – விவரம் வெளிவந்தது!

image

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று (நவ.27) மனு அளித்துள்ளனர்.

News November 27, 2025

வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

வேலூரில் நாளை தொடங்கும் இலவச புத்தகக் காட்சி!

image

வேலூர், எத்திராஜ் மண்டபத்தில் புத்தகக் காட்சி நாளை நவ.28 முதல் தொடங்குகிறது. அனைத்து வயது மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு வகை நூல்கள், கல்வி, இலக்கியம், அறிவியல், குழந்தைகள் புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இவை, பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நுழைந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாள்கள் நடைபெறும் இக்காட்சிக்கு வாசகர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும்.

error: Content is protected !!