News June 26, 2024

கைதியிடம் லஞ்சம் பெற்ற காவலர் பணியிடை நீக்கம்

image

மதுரை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, போதைப் பொருட்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. விசாரணையில்,செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பரிடம் சிறைக் காவலர் முகமது ஆசிப் ரூ.5ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

Similar News

News November 17, 2025

மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

image

மதுரை மாவட்ட காவல் துறையால் கழிவு செய்­யப்­பட்ட 14 வாகனங்­கள் (8 நான்கு சக்­கர வாகனம், 6 டூவீலர்கள்) பொது ஏலம் விடப்பட உள்­ளன. ஏலம் வருகின்ற நவ.18 காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயு­த படை மைதானத்­தில் நடை­பெ­ற­ உள்ளது. பங்­கேற்க விரும்­பும் நபர்­கள் நவ.18 காலை 8.00 மணிக்கு தங்­க­ளது ஆதார் அட் டை­யு­டன் ரூ. 5,000/ முன் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

image

திருமங்­க­லம் அருகே உச்­சப்­பட்டியை சேர்ந்­தவர் கண்­ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்­கள் இருவரும் பைக்கில் கப்­ப­லூர் காம­ரா­ஜர் கல்­லூரி அருகே நேற்று சென்­ற­ போது, பின்­னால் அமர்ந்திருந்த செல்வி திடீ­ரென தவறி
விழுந்­தார். அடிபட்ட அவர் அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் டவுன் போலீ­சார் வழக்­கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

News November 17, 2025

மதுரையில் இன்று, நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை, மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழவந்தான் பகுதியிலும் நாளை மேலூர், கொட்டம்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, எழுமலை, உசிலம்பட்டி, தும்மைகுண்டு, திருவாதவூர், நாட்டார்மங்கலம், , நரசிங்கம்பட்டி, A.வள்ளலாளபட்டி,மேலவளவு, தனியாமங்கலம், வாடிப்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!