News June 26, 2024
கைதியிடம் லஞ்சம் பெற்ற காவலர் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, போதைப் பொருட்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. விசாரணையில்,செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பரிடம் சிறைக் காவலர் முகமது ஆசிப் ரூ.5ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
Similar News
News October 27, 2025
மதுரையின் புதிய மேயர் இவரா..?

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் இந்திராணி, மேயர் பதவியை இழந்தார். புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News October 27, 2025
மதுரையில் முன்விரோதத்தில் ஒருவர் கொலை

மதுரை புதுவிளாங்குடி யுவராஜ், 24. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம்குமார், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. யுவராஜ், அக்., 19 இரவு, நண்பர் சித்தனுடன் 19, வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஷியாம்குமார், சபா உட்பட 6 பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜை வெட்டினர். மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தன் நேற்று இறந்தார்.4 பேரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.
News October 26, 2025
மதுரை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


