News March 28, 2024

கே.கே.நகர் அருகே ரூ.7 லட்சம் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 17, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்

News November 16, 2025

தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் வாழ்த்து

image

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ’ ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம் என்றும், ஊடகங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே சக்தி என்றும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!