News March 28, 2024

கே.கே.நகர் அருகே ரூ.7 லட்சம் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 13, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News November 13, 2025

சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

image

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு அருமையான வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

சென்னை அருகே சிறுவனை கத்தியால் தாக்கியவர் கைது

image

சாலிகிராமம் காந்தி நகரில், கணேஷ் என்பவரின் வீட்டில் வசிக்கும் பாஸ்கரன், லீசு பணம் ரூ.6 லட்சம் பெற்றும், மறுநாள் மீண்டும் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பின்னர், நேற்று கணேஷ் வெளியே சென்ற போது, அவரது மகனை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!