News April 29, 2025
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
ஈரோட்டில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 16,71,760 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8,06,914 பெண் வாக்காளர்கள் 8,64,682 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 164 பேர் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,25,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
ஈரோட்டிற்கு கூடுதலாக ரூ.400 கோடி!

ஈரோடு மாவட்டத்துக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்க கூடுதலாக ரூ.400 கோடி அரசிடம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை டிசம்பர் மாதம் வந்து விடும் என இருந்தோம். ஆனால் வரவில்லை. அப்படி ஏதேனும் தொகை வந்தால் 31-ந் தேதிக்குள் கடன்கள் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்தார்.
News December 20, 2025
ஈரோட்டில் அபராதம் விதித்து அதிரடி!

பர்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒந்தனை ஆழ்வார்த்தி பகுதியில், பசுவன் என்பவரது பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து மட்டும் அல்லாமால் விதிமுறைகளை மீறி தனது வீட்டிற்கும், விவசாய நிலத்திற்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி பயன்படித்தியாதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிக்கு 10,875 ரூபாய் அபராதம் விதித்தனர்.


