News April 23, 2025
கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.
Similar News
News December 23, 2025
இராமநாதபுரம்: இலவச நான்கு சக்கர வாகனம் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து, இராமநாதபுரம் பூ மாலை வணிக வளாகம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில், வருகின்ற டிச.26ம் தேதி இலவச நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது 30 நாட்களுக்கு நடைபெறும். பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM வரை. மேலும், தகவலுக்கு 9087260074, 8056771986 தொடர்பு கொள்ளவும்.
News December 23, 2025
ராம்நாடு: கலெக்டர் ஆபிஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெடிகுண்டு வைத்திருப்பதாக இ–மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தேவசேனா உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார்கள், டூவீலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களில் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது புரளி எனத் தெரியவந்தது.
News December 23, 2025
இராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 2025ம் மாதத்திற்கான குறை தீர் நாள் கூட்டம் டிச.26ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


