News January 1, 2025
கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கேக் வெட்டி காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News December 3, 2025
எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்ற குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (டிச.03) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 15 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரித்தார்.
News December 3, 2025
திருப்பத்தூர்:காலஅட்டவணையை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதில் கணக்கீட்டிற்கான காலம், பட்டியல் வெளியிடும் நாள், சரி பார்ப்பதற்கான இறுதி நாள், வெளியிடும் நாள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது. அதனை மாவட்ட வலைதளத்தில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார்.
News December 3, 2025
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று(டிச.03) உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு Alimco திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


